கும்மிடிப்பூண்டியில் 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X
By - Saikiran, Reporter |24 April 2022 7:15 AM IST
கும்மிடிப்பூண்டியில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி போலீசார் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டியில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய வழுதலம்பேடு கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விரைந்து சென்று போலிஸார் சோதனை செய்த போது கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து. கும்மிடிப்பூண்டி காவல்நிலையத்தில் கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் உணவு பொருட்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள் மீட்கப்பட்ட ரேஷன் அரிசியை பஞ்செட்டி உணவுப்பொருள் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu