/* */

பார்வையற்றவர்களுக்கு நிவாரணங்களை முன்னாள் வட்டாட்சியர் இளவரசி வழங்கினார்

பூவளம் பேடு ஊராட்சியில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பார்வையற்றோர் குடும்பங்களுக்கு நிவாரணங்களை முன்னாள் வட்டாட்சியர் இளவரசி வழங்கினார்

HIGHLIGHTS

பார்வையற்றவர்களுக்கு நிவாரணங்களை முன்னாள் வட்டாட்சியர் இளவரசி வழங்கினார்
X

பார்வையற்றோர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது

எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகை பேர் கிராமத்தில் அன்னை தெரசா கல்வி மருத்துவம் விளையாட்டு சமூக அறக்கட்டளை இயங்கி வருகிறது. இதன் நிறுவன தலைவராக ஊத்துக்கோட்டை ஓய்வு பெற்ற வட்டாட்சியர் டாக்டர் செல்வி இளவரசி இருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பூவளம் பேடு ஊராட்சியில் 30க்கும் மேற்பட்ட பார்வையற்ற குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர் தற்போது மாண்டஸ் புயல் மற்றும் தொடர் மழை காரணத்தினால் இப்பகுதியில் வாழும் பார்வையற்றவர்கள் வாழ்வாதாரம் இழந்து பரிதவித்து வந்தனர். அங்கு வசிக்கும் பார்வையற்ற 30 குடும்பங்களுக்கு உதவிடும் வகையில்அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இதன் நிறுவன தலைவரும் முன்னாள் ஊத்துக்கோட்டை ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான டாக்டர் செல்வி இளவரசி பார்வையற்றவர்கள் வசிக்கும் இடத்திலே நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி ஒவ்வொரு குடும்பத்திற்கு ஐந்து கிலோ அரிசி, தக்காளி, வெங்காயம், காய் கனிகள் அடங்கிய தொகுப்பு, குழந்தைகளுக்கு பால், பிஸ்கட், பிரட், மதிய உணவு உள்ளிட்டவை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் செயலாளர் அழிஞ்சிவாக்கம் ரகு, பொருளாளர் பிரின்ஸ், நிர்வாகிகள் தினகரன் லிசா உமாபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்ட பார்வையற்ற மக்கள் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் செல்வி இளவரசிக்கு தாங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Updated On: 14 Dec 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  3. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  4. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  5. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  6. வீடியோ
    🔴LIVE : முரசு மக்கள் கட்சியின் தலைவர் தேவன் காவல் நிலையங்களின் மீது...
  7. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  8. வீடியோ
    BaluMahendra-வை அப்பா போல் கவனித்த Garudan Director !#balumahendra...
  9. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...