கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரத்தை குளிர்வித்த மழை

கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரத்தை குளிர்வித்த மழை
X

கும்மிடிப்பூண்டியில் நேற்றிரவு சாரல் மழை பெய்தது.

கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு மிதமான மழை பெய்தது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபாளையம் சுற்றுவட்டார இடங்களில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வந்தது. பெரியபாளையம் சுற்றுப்பகுதிகளில், நேற்று பகலில் வெப்பம் வாட்டிய நிலையில் இரவு சுமார் 30நிமிடத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது.

மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது. திடீர் மழையால் அலுவலகம் முடித்து வீடுகளுக்கு திரும்பி செல்வோர் மழையில் நனைந்தபடியே சென்றனர். வாகன நெரிசலும் உண்டானது.

Tags

Next Story
ai in future agriculture