/* */

திருவள்ளூர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

திருவள்ளூர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே  வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
X

வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மக்கள்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் சூளைமேனி காலனி பகுதியில் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சுமார் 150 பேர் பணி செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக 100 நாள் வேலை வழங்குவதில்லை என்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கப் படவில்லை என கூறப்படுகிறது. நேற்று கிராம மக்கள் ஒன்று கூடி எல்லாபுரம் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சிகள் ஸ்டாலினிடம் தெரிவிக்க வந்தபோது சரியான பதில் அளிக்கவில்லை என்று ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 13 Sep 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலைக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  3. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  4. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  5. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  6. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  7. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  8. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  9. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  10. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!