கவரப்பேட்டையில் ஒன்றிய தி.மு.க. சார்பில் குடிநீர் பந்தல் திறப்பு

கவரப்பேட்டையில் ஒன்றிய தி.மு.க. சார்பில் குடிநீர் பந்தல் திறக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் சார்பில் குடிநீர் பந்தல் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கி.வே. ஆனந்தகுமார் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொ றுப்பாளரும் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான டி.ஜே. கோவிந் தராஜன் கலந்துகொண்டு குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு தாகம் தணிக்கும் விதமாக நீர் மோர், இள நீர்,தர்பூசணி,குளிர்பானம் உள்ளி ட்ட தண்ணீர் தாகத்தை தணிக்கும் பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடுகளை கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் கி.வே. ஆனந்தகுமார் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட ஒன்றிய நகர பிற அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu