/* */

கும்மிடிப்பூண்டி அருகே சிவன் கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி அருகே அயநெல்லூர் கிராமத்தில் சிவன் கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி அருகே சிவன் கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம்
X

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், அயநெல்லூர் கிராமத்தில் பசுபதீஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 8 தேதி பந்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு பூஜைகள் தியாகங்கள் நடத்தப்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் லக்ஷ்மி ஹோமம், கிராம தேவதா பூஜை கோபூஜை அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட பூஜை நடைபெற்றது.

பின்னர் அருள்மிகு காமாட்சி அம்பாள் உடனுறை பசுபதீஸ்வார் சிவனுக்கு வாஸ்துசாந்தி, பிரவேச பலி, ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கலாகர்ஷனம் கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், வேதிகார்ச்சனை, மஹா சங்கல்பம், முதற்கால யாக சாலை பூஜை, பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை, பிரசாத விநியோகம் விசேஷ சந்தி, சகல பரிவார தேவதா ஆவாஹனம், சோம பூஜை, பாலிகா பூஜை, துவார பூஜை மஹா பூர்ணாஹுதி, சதுர்வேத பாராயணம், ராக தாள உபச்சாரம், திராவிட வேதம், மஹா தீபாராதனை, பிரசாத விநியோகம் மற்றும் நாடி சந்தானம் நடைபெறும்.

ஸ்பர்ஸா ஹுதி, இரண்டாம் கால யாக சாலை பூஜை, விசேஷ பூஜை, விசேஷ ஹோமம், சகல சூக்த ஹோமம் மூல மந்தர ஜப ஹோமம், திரவ்யாஹுதி வேதிகார்ச்சனை, ருத்ர பாராயண ஹோமம் மாஹபூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் யாகசாலையில் புனித நீர் எடுத்து வந்து கோயிலை வலம் வந்து ராஜகோபுரம் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

பிற்பகல் 1000.ஆயிரம் பேருக்கு அன்னதானமும், ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணமும் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலாவும் நடைபெற உள்ளது.இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார் அவருக்கு ஆலயத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது மேலும் இதில் 500 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

இந்தக் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை அயநெல்லூர் கிராம பெரியவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், இளைஞர்கள் முன்னின்று சிறப்பாக நடத்தினார்.

Updated On: 25 March 2024 9:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்