நரிக்குறவர் இன மக்கள் சாதி சான்றிதழ் வழங்க கோரி நூதன போராட்டம்

நரிக்குறவர் இன மக்கள் சாதி சான்றிதழ் வழங்க கோரி நூதன போராட்டம்
X
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் நரிக்குறவர் இன மக்கள் சாதி சான்றிதழ் வழங்க கோரி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நரிக்குறவர் இன மக்கள் சாதி சான்றிதழ் வழங்கக் கோரி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துபாக்கம் கிராமத்தில் சுமார் 3 தலைமுறைகளாக நரிக்குறவர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழக அரசின் பல்வேறு உதவிகளைப் பெற சாதி சான்றிதழ் அவசியம் என்பதால் அதற்காக பலவித பாேராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் சாதி சான்றிதழ் வழங்கவில்லை.

இந்நிலையில் இன்று காலை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நரிக்குறவர் இன மக்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி