15 நாட்களில் எலும்பு முறிவை இணைக்கும் ஆராய்ச்சியில் கும்மிடிப்பூண்டி மாணவர் சாதனை

15 நாட்களில் எலும்பு முறிவை இணைக்கும் ஆராய்ச்சியில் கும்மிடிப்பூண்டி மாணவர் சாதனை
X

சாதனை படைத்த மாணவர் வைத்தியநாதன்.

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மாணவர் ஒருவர் எலும்பு முறிந்து 15 நாட்களில் கூடும் ஆராய்ச்சியை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த பேரூராட்சி வசந்த பஜார் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (22). இவர் பஞ்சாபில் உள்ள உயிரியல் பட்டப்படிப்பில் 4ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், ஒருவருக்கு எலும்பு முறிந்தால் கூடுவதற்கு 3 மாதங்கள் ஆகும் நிலையில், தற்போது 15 நாட்களில் எலும்பு முறிந்தால் கூடும் ஆராய்ச்சி மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். இதனைப் பாராட்டி கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture