/* */

கும்மிடிப்பூண்டி: சொகுசு காரில் கடத்தப்பட்ட 1300 மதுபானம் பறிமுதல்: ஒருவர் கைது

ஆரம்பாக்கம் அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின்போது சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 1300 மதுபாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி: சொகுசு காரில் கடத்தப்பட்ட 1300 மதுபானம் பறிமுதல்: ஒருவர் கைது
X

மதுபானங்கள் கடத்தி வந்த காரை போலீசார் சோதனையிட்ட காட்சி.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்ட் ரமேஷ் மேற்பார்வையில் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்றை சந்தேகத்தின்பேரில் போலீசார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 14 மூட்டைகளில் மொத்தம் 1300 ஆந்திர மாநில மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

ஊரடங்கு காலகட்டத்தில் சென்னையின் புறநகரான திருவொற்றியூரில் விற்பனை செய்வதற்காக மேற்கண்ட மதுபாட்டில்கள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்லப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. கடத்தப்பட்ட மது பாட்டில்களில் மதிப்பு ரூ. 2லட்சம் ஆகும்.

இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சொகுசு காரை ஓட்டிச்சென்ற சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த சிவகுமார் (37) என்பவரை நேற்று கைது செய்தனர். 1300 மது பாட்டில்களுடன் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 4 Jun 2021 11:51 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?