/* */

கும்மிடிப்பூண்டி: தனியார் தொழிற்சாலை பணியாளர் மின்சாரம் தாக்கி பலி!

தனியார் தொழிற்சாலையில் மின்னியல் வல்லுநராக பணிபுரிந்து வந்த வடமாநில இளைஞர் மின்சாரம் தாக்கி பலியானார்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி: தனியார் தொழிற்சாலை பணியாளர் மின்சாரம் தாக்கி பலி!
X

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன ஒபுலபுரத்தில் இயங்கிவரும் ஷேரன் பிளைவுட் தனியார் தொழிற்சாலையில் மின்னியல் வல்லுநராக பணிபுரிந்து வருபவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கான்ஷாம் மாஹிர் (31). இவர் தொழிற்சாலையில் கடந்த 6 மாதங்களாக ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறை சரி செய்ய முற்பட்டுள்ளார்.

அப்போது அவரின் உடலில் மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த அவரை தொழிற்சாலை நிர்வாகம் முதலுதவி செய்தனர். பின்னர் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 6 Jun 2021 2:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்