/* */

கும்மிடிப்பூண்டி: தனியார் அனல்மின் நிலைய வளாகத்தில் திடீர் தீ விபத்து!

கும்மிடிப்பூண்டி தனியார் அனல் மின் நிலைய வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட தைல மரங்கள் எரிந்து நாசமாயின.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பில்லா குப்பத்தில் தனியார் அனல்மின் நிலையம் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் பூட்டி கிடந்த இந்த அனல்மின் நிலைய வளாகத்தில் 10ஏக்கர் பரப்பளவிலான தைல மரங்கள் வளர்ந்து விரிந்து காணப்படுகிறது. காய்ந்து கீழே உதிர்ந்த அதன் இலைகளில் பற்றிய தீ காற்றின் வேகத்தால் மளமளவென பரவியதால் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதுகுறித்து அனல்மின் நிலைய காவலாளி ராமன் என்பவர் அளித்த தகவலை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் தொழில் பூங்கா வளாகத்தில் இருந்து 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீவிபத்தில் 100க்கும் மேற்பட்ட தைல மரங்கள் எரிந்து சாம்பலாகின. நல்ல வேளையாக அனல் மின் நிலையத்தில் தீ பரவாமல் தடுக்கப்ட்டது.

Updated On: 6 Jun 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...