/* */

கும்மிடிப்பூண்டி: அம்மன் கோவில் பூட்டை உடைத்து 2 சவரன் நகை கொள்ளை!

கும்மிடிப்பூண்டி அருகே ஓபசமுத்திரம் அங்காள பரமேஸ்வரி கோவில் பூட்டை உடைத்து 2 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி: அம்மன் கோவில் பூட்டை உடைத்து 2 சவரன் நகை கொள்ளை!
X
நகை திருட்டுபோனத அம்மன் கோவில்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஓபசமுத்திரம் கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அங்காளம்மன் பரமேற்வரி கோவில் உள்ளது.

கிராம மக்கள் அங்காளம்மன் பரமேஸ்வரி கோயிலில் செவ்வாய், வெள்ளி, ஆடி மாத வழிபாடு என்று பல்வேறு விழாக்களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அம்மன் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள், ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 9 Jun 2021 9:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?