கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

கைது செய்யப்பட்ட அலறல்,சபிக்ஷேக்.அலறல்,சபிக்ஷேக்

கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையின் போது பேருந்தில் கடத்திவரப்பட்ட 9 கிலோ கஞ்சா பறிமுதல் இரண்டு பேர் கைது செய்யப்பட்னர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து வந்த 103 -N வழித்தட அரசு பேருந்தை சோதனை செய்த போது சந்தேகத்துக்கிடமாக இருந்த பையை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் கஞ்சா போதைப் பொருள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் பேருந்தில் சந்தேகிக்கும் விதமாக நடந்து கொண்ட மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அலறல் ( வயது 28), சபிக் ஷேக் ( வயது 32) ஆகிய இரண்டு பேரை விசாரணை செய்தனர்.

விசாரணையில் நெல்லூரில் இருந்து கஞ்சாவை குறைந்த விலைக்கு வாங்கி கேரளா சுற்றுவட்டார பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனைக்காக வாங்கி செல்வது உறுதியானது. இதைத்தொடர்ந்து கடத்தல் ஈடுபட்ட 2 வாலிபர்களிடமும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story