கும்மிடிப்பூண்டி அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து

கும்மிடிப்பூண்டி அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி  பயங்கர விபத்து
X

கும்மிடிப்பூண்டி அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ரயில் பெட்டிகள் சரிந்து விழுந்து கிடக்கும் காட்சி.

கவரப்பேட்டை அருகே நின்றிருந்த சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்னை பெரம்பூர் வழியாக திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை நோக்கி பீகார் மாநிலம் தர்பாங்காக்கு இன்று இரவு எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. கவரப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 10 பெட்டிகள் தரம் புரண்டன.

இதில் இரண்டு குளிர்சாதன பெட்டிகள் தீ பற்றி மள மள என எரிந்தது. இதனை கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே துறை ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும பொதுமக்கள் தன்னார்களாக தாங்களே முன்வந்து விபத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்டு வருகின்றனர். விபத்துக்கு சிக்னல் கோளாறா அல்லது ஓட்டுநர் தூக்க கலக்கமா காரணம் என இன்னும் தெரியவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்தில் பயணிகள் யாரும் உயிரிழந்தார்களா? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.


படுகாயம் அடைந்தவர்களை கவரப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இரவு நேரம் என்பதால் பணிகள் சற்று தாமதமாகவே நடைபெற்று வருகின்றது மேலும் அவ்வழியாக செல்லும் ரயில்கள் தாமதமாக செல்கின்றன. இந்த ரயில் விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
Similar Posts
கும்மிடிப்பூண்டி அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி  பயங்கர விபத்து
இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே கஞ்சா கடத்திய இரண்டு பேர் கைது
கமல் பிறந்தநாளில் தக் லைஃப் டிரைலர்! விரைவில் அறிவிப்பு..!
அடகு கடையில் போலி தங்க நகை வைத்து மோசடியில் ஈடுபட்ட 6 பேர்  கைது
கும்மிடிப்பூண்டி அருகே முட்புதரில் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் உடல்
அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் அஜித்குமார் திரைப்படங்கள்..! முதல்ல எது தெரியுமா?
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வீடு தீ பற்றி எரிந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
தெலுங்கில் மாஸ் ஹீரோவுடன் இணையும் சுந்தர் சி! வேற லெவல் கதையாம்..!
BiggBoss Promo சுனிதாவுடன் மல்லுக்கட்டும் ஜாக்லின்! கடைசியில்...
BiggBoss Tamil முதல் நாள் முதல் ஆளாக வெளியேறிய விஜய்சேதுபதி மகள்..!
கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் கஞ்சா பறிமுதல்: இருவர் கைது