Begin typing your search above and press return to search.
கும்மிடிப்பூண்டி: கோட்டக்கரை மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் திறப்பு
கோட்டக்கரை மருத்துவமனையில் ரூ. 25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டயாலிசிஸ் மையம் திறந்து வைக்கப்பட்டது.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டக்கரை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் ரத்த சுத்திகரிப்பு மையம் திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட சேர்மன் உமாமகேஸ்வரி, எம்.எல்.ஏ க்கள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, பொன்னேரி துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி திமுக நகர பேருர் செயலாளர் அறிவழகன், மற்றும் திமுக வை சேர்ந்த மாவட்ட நகர நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.