/* */

சூரவரிகண்டிகையில் செங்கல் லாரி கவிழ்ந்து விபத்து; 5 பேர் படுகாயம்

கும்மிடிப்பூண்டி அருகே செங்கல் ஏற்றிச்சென்ற லாரி நடுரோட்டில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

சூரவரிகண்டிகையில் செங்கல் லாரி கவிழ்ந்து விபத்து; 5 பேர் படுகாயம்
X

விபத்துக்குள்ளான லாரி.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தனியாருக்கு சொந்தமான செங்கல் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு மாதர்பாக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வழியில் சூரவரிகண்டிகை என்ற இடத்தில் சென்றபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது.

இதில் செங்கல் லாரியில் இருந்த மாத்தையா, போலையா, ஆஞ்சநேயாலு, அங்கையா மற்றும் ஓட்டுநரான கார்த்திக் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். காயத்துடன் அனைவரும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சாலை குண்டும் குழியுமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

Updated On: 20 Aug 2021 9:19 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  2. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  3. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  4. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  6. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  7. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  8. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  9. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  10. லைஃப்ஸ்டைல்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!