Begin typing your search above and press return to search.
பட்டப்பகலில் கதவை உடைத்து 10சவரன் நகை கொள்ளை!
புதுகும்முடிபூண்டி ஊராட்சி, கரும்பு குப்பம் கிராமத்தில் கொள்ளையர்கள் துணிகரம்..!
HIGHLIGHTS
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி கரும்பு குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவரத்தினம் (30). வீட்டை பட்டப்பகலில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கடப்பாறையால் உடைத்து பீரோவில் இருந்த 10 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தேவரத்தினம் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.