/* */

கும்மிடிப்பூண்டி அருகே பாம்பு கடித்து சிறுவன் பலி

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் கிராமத்தில் சிறுவன் பாம்பு கடித்து இறந்தார்.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தலையாரி பாளையத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முனிவேல் இவரது மனைவி ரேகா. இந்த தம்பதியரின் மகன் விஷ்வா (12) இவர் நேற்று காலை வீட்டின் அருகே சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த விஷப்பாம்பு சிறுவனை கடித்துள்ளது.

பின்னர் பெற்றோருக்கு தகவலளித்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று முதலுதவிக்கு பின்னர் 108 அவசர ஊர்தியில் சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது சிறுவன் உயிரிழந்ததாக அவசர ஊர்தி ஊழியர் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொன்னேரி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்து சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. விஷப்பாம்பு கடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 9 May 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி