/* */

பெரியபாளையம் பகுதியில் மேளம் கொட்டி போகி கொண்டாடிய சிறுவர்கள்

பெரியபாளையம் பகுதியில் , சிறுவர்கள் மேளம் கொட்டி போகியை கொண்டாடி வரவேற்றனர்.

HIGHLIGHTS

பெரியபாளையம் பகுதியில் மேளம் கொட்டி போகி கொண்டாடிய சிறுவர்கள்
X

மேளம் கொட்டி போகியை வரவேற்ற சிறுவர்கள். 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, ஆண்டு தோறும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகி பண்டிகையின் போது, பழைய வேண்டாதவற்றை தீயிட்டு எரித்துவிடுவர்.

அவ்வகையில், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் விடியற்காலை கொட்டும் பனியில், மக்கள் தங்கள் வீட்டின் முன்பு பழையன கழிதலும் புதியன புகுதலும் விதமாக தங்கள் விட்டில் இருந்த பழைய பாய்கள், முறம், துடைப்பம், துணிமணி பழைய அட்டைகள் மற்றும் பழைய காகிதங்களை வீட்டின் முன் குவித்து தீ வைத்தனர்.

சுற்றுச்சூழலை பாதிக்கும் பிலாஸ்டிக், டயர் உள்ளிட்டவற்றை தவிர்த்து, பழைய பொருட்களை தீயிலிட்டனர். சிறுவர்கள் போகி பண்டிகை மற்றும் தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாளை வரவேற்கும் விதமாக, போகி மேளம் கொட்டி உற்சாகமாக போகி பண்டிகையை கொண்டாடினர்.

Updated On: 13 Jan 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...