கும்மிடிப்பூண்டியில் அதிமுக உட்கட்சி தேர்தல்

X
கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தல்
By - Saikiran, Reporter |14 Dec 2021 8:30 AM IST
கும்மிடிப்பூண்டியில் உள்ள 61 ஊராட்சிகளை சேர்ந்த 362 கிளைகளுக்கு அதிமுக சார்பில் உள்கட்சி தேர்தல் எளாவூரில் நடைபெற்றது
கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம் எஸ்.சிவகுமார், ஒன்றிய செயலாளர் வி.கோபால் நாயுடு ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள அதிமுக கிளைகளின் உட்கட்சித் தேர்தலுக்கு அதிமுக நிர்வாகிகள் அபிராமன்,எஸ்.எம். ஸ்ரீதர், முல்லைவேந்தன், எத்திராஜன், மாவட்ட மீனவர் அணி துணை செயலாளர் ஜெ.சுரேஷ் முன்னிலை வகித்தனர்.
இந்த உட்கட்சி தேர்தலுக்கு பார்வையாளராக அதிமுக மாநில நிர்வாகி ஜே.சி.டி. பிரபாகரன், மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் பொன்னேரி எம்எல்ஏ சிறுனியம் பலராமன் பங்கேற்று இந்த உட்கட்சி தேர்தலை ஆய்வு செய்தனர்.
நிகழ்வில் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 61 ஊராட்சிகளை சேர்ந்த 362 கிளைகளுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் தலா ரூ. 250 கட்டணம் செலுத்தி மனுதாக்கல் செய்துள்ளனர்.
நிகழ்வில் அதிமுக பிரதிநிதிகள் பெரியபுலியூர் தன்ராஜ், கண்னம்பாக்கம் சதீஷ் ,புது கும்மிடிப்பூண்டி எல்.சுகுமாரன், குமரன் நாயக்கன் பேட்டை கே.பி.ஆரோன், பெரிய ஓபுளாபுரம் ஏழுமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu