/* */

சென்னை அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி

சென்னை அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சென்னை அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி
X

நீரில் மூழ்கி இறந்தவரின் உடல் மீட்கப்பட்டது.

சென்னை மூலக்கடையைச் சேர்ந்த கோட்டீஸ்வரன் மகன் விக்னேஷ் வயது(18) சென்னையில் கார் மெக்கானிக் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் தொளவெடு கிராமத்தில் தன் உறவினர் வீட்டுக்கு விக்னேஷ் 5.பேர் கொண்ட நண்பர்களுடன் வந்து இருந்தார்.

அப்போது கிராமம் அருகே உள்ள ஆரணி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற விக்னேஷ் ஆரணி ஆற்றில் நீர் தேங்கியிருந்த அதிக ஆழமான பகுதியில் சென்று குளித்தபோது திடீரென காணாமல் போனதால் இதனை கவனித்த நண்பர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் தேர்வாய் கண்டிகை சிப்காட் பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தேடிய பின்னர் விக்னேஷ் உடலை சடலமாக மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

Updated On: 16 Jan 2022 8:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது