கும்மிடிப்பூண்டி அருகே கூலித் தொழிலாளி வெட்டிக்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே கூலித் தொழிலாளி வெட்டிக்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே முன்விரோத காரணமாக கூலி தொழிலாளியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லாக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அஜய் ( வயது 24). இவர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வெல்டிங் வேலை செய்து வந்தார். மேலும் ஓடு வேயும் பணியும் செய்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு சென்ற அஜய் இரவு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் இரவு அஜய்யை தொடர்பு கொள்ள முயற்சித்தும் செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. இரவு பணிக்காக சென்று விட்டு வீடு திரும்புவார் என காத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் பில்லாக்குப்பம் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே ஆடு, மாடு மேய்ச்சலில் இருந்தவர்கள் அஜய் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடப்பதாக சிப்காட் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், பின் கழுத்தில் வெட்டு காயங்களுடன் முகம் சற்று தீய்ந்த நிலையிலும் இருந்துள்ளது.

இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான முன்விரோதம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேலைக்கு சென்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது .

Tags

Next Story