Begin typing your search above and press return to search.
எல்லம்மன்கண்டிகையில் மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லம்மன்கண்டிகை இருளர் காலனி சேர்ந்த 14 வயது சிறுவன் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள எல்லம்மன்கண்டிகை இருளர் காலனியை சேர்ந்தவர் ஆஞ்சநேயர் கூலித்தொழிலாளி. இவரது மகன் சென்செய்யா (14) வீட்டின் எதிரே உள்ள நாவல் மரத்தில் ஏறி பழம் பறித்துக் கொண்டிருந்தார்.
அப்போது கால் தவறி கீழே விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக சிறுவனை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சென்செய்யா உயிரிழந்தார்.
இதுகுறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.