/* */

ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள் பறிமுதல்

ஊத்துக்கோட்டை வாகன சோதனையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள் பறிமுதல்
X

ஊத்துக்கோட்டையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.

திருவள்ளூர் மாவடடம், தமிழக-ஆந்திர எல்லையில் ஊத்துக்கோட்டை பகுதியில் போக்குவரத்து சோதனை சாவடி உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து ஆந்திரா , கர்நாடகா போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கும் அங்கிருந்து தமிழகத்திற்கு வருவதற்கும் ஊத்துக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில் இன்று காலை முதல் அனுமதி பெறாமல் செல்லும் வாகனங்களை ஊத்துக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் சந்திரன் மற்றும் அதிகாரிகள் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் சோதனை செய்தனர் . அப்போது சோதனை சாவடியில் திடீர் சோதனை மேற்கொண்டபோது தனிநபருக்கு சொந்தமான வாகனங்களை வாடகைக்கு எடுத்துச்சென்றது தெரிந்தது மேலும் அனுமதிசீட்டு பெறாமல் கள்ளத்தனமாக வாடகை ,வாகனமாக பயன்படுத்தப்பட்ட 5 தனியார் வாகனங்கள் பறிமுதல் செய்து மேல் நடவடிக்கைக்காக திருவள்ளூர் வட்டாரப்போக்குவரத்து அலுவலர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த பகுதியில் இருந்து தான் ஆந்திராவில் இருந்த போதை பொருட்கள் அடிக்கடி கடத்தி வருவதாக எச்சரிக்கை இருப்பதால் சோதனகைளை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 29 March 2024 9:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  3. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  5. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  6. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  8. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  9. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கருக்கு மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு