டயர் உற்பத்தி ஆலையில் திடீர் தீ விபத்து

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் செயல்பட்டு வரும் தனியார் ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ரப்பர் பொருள்கள், டயர்கள் எரிந்து நாசமாயின.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தனியாருக்கு சொந்தமான டயர் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. சுமார் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை உள்ளடக்கிய இந்த தொழிற்சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 2 சக்கர வாகனங்களுக்கு தேவையான டயர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று காலை சுமார் 8 மணி அளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

விபத்து குறித்த தகவல் அறிந்து கும்மிடிப்பூண்டி, சிப்காட், தேர்வாய், பொன்னேரி ஆகிய 4 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த 6 தீயணைப்பு வாகனங்களின் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.மேலும் தனியார் டேங்கர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் பணி வேகமாக நடைபெற்று வந்தாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு வீரர்களும் தொழிற்சாலை நிர்வாகத்தினரும் திணறி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் கும்மிடிப்பூண்டி சிப்காட் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

Tags

Next Story