/* */

மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்த கூலித் தொழிலாளி அடித்துக் கொலை

ஆவடி அருகே திருமுல்லைவாயலில் மதுஅருந்த உறவினரிடம் பணம் கேட்ட கூலி தொழிலாளி கொலை செய்யப்பட சம்பவத்தில் ஒருவர் கைது.

HIGHLIGHTS

மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்த கூலித் தொழிலாளி அடித்துக் கொலை
X

கைது செய்யப்பட்ட விக்னேஸ்வரன்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே திருமுல்லைவாயில் - வெங்கடேஸ்வரா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி(45). இவர் தன் மகன் விக்னேஷ்வரன்(24) மற்றும் உறவினரான செல்வராஜ் என்கிற ஏழுமலை (55)ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

உமாமகேஸ்வரியும், ஏழுமலையும் இருவரும் தின கூலி வேலைக்குச் சென்று வந்தனர். இதில் ஏழுமலை வாங்கும் சம்பளத்தை உமா மகேஸ்வரி இடம் கொடுத்து வைத்து தேவைக்கு மட்டும் பணம் வாங்கிக் கொள்வது வழக்கம். இதனை அடுத்து, ஏழுமலை ஏற்கனவே மது அருந்திவிட்டு வந்து, மீண்டும் மது அருந்த பணம் கேட்டு உமாமகேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த உமாமகேஸ்வரியின் மகன் விக்னேஷ்வரன், ஏழுமலையை கீழே தள்ளிவிட்டதாகத் கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்த காயமடைந்த ஏழுமலை உயிரிழந்தார்.

இதுகுறித்து, தகவலறிந்த திருமுல்லைவாயில் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 31 May 2022 2:00 AM GMT

Related News