ஆவடியில் நடந்த இரட்டைக் கொலையில் 10 பேரை கைது செய்து விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஓ.சி.எப். மைதானத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில், 2 வாலிபர்கள் அரிவாளால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொடூர இரட்டைக்கொலை தொடர்பாக, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரித்தனார். இதில், கொலையானது ஆவடி மசூதி தெருவைச் சேர்ந்த அசாருதீன் (வயது 30) மற்றும் ஆவடி கவுரிபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுந்தர் (30) என்று தெரிய வந்தது. இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரட்டை கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்து அவர்களிடம் நடத்திய விசரணையில், தற்போது மணிகண்டன் உள்பட 10 பேரை கைது செய்து ஆவடி டேங்க் பேக்டரி காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu