/* */

திருவள்ளூர்:1000 ஆக்ஸிஜன் படுக்கை அமைக்கும் பணி- அமைச்சர் நாசர் தகவல்!

திருவள்ளூர் மாவட்டத்தில் 1000 ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் சா.மு. நாசர் கூறினார்.

HIGHLIGHTS

திருவள்ளூர்:1000 ஆக்ஸிஜன் படுக்கை அமைக்கும் பணி- அமைச்சர் நாசர் தகவல்!
X

அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள அம்மா திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் படுக்கைகள், கழிவறைகள், மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சா.மு. நாசர், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தும் விதமாக சுமார் 1000 ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் ஆவடியில் உள்ள அம்மா திருமண மண்டபத்தில் 112 ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு ஒரு வாரத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 May 2021 1:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க