/* */

திருமுல்லைவாயில்: நரிக்குறவரின் வீடியோ பதிவு... உதவிய கோட்டாட்சியர்!

திருமுல்லைவாயிலில் உணவுற்கு வழியில்லாமல் வீடியோ பதிவிட்ட நரிக்குறவர் குடும்பத்தினருக்கு வருவாய் கோட்டாட்சியர் உதவி புரிந்தார்.

HIGHLIGHTS

திருமுல்லைவாயில்:   நரிக்குறவரின் வீடியோ பதிவு... உதவிய கோட்டாட்சியர்!
X

நரிக்குரவருக்கு உதவிய கோட்டாட்சியர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் பகுதியில் நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் பகுதி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரானா இரண்டாம் அலை பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு தொழில்கள் முடங்கி போயுள்ளன.

ஊசிமணி, பாசிமணி போன்ற பொருட்களை விற்று அன்றாட பிழைப்பை நடத்தி வந்த இவர்கள், தற்போது வாழ்வாதாரம் பாதித்து, உணவிற்கு கூட வழியில்லை என வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.

அந்த வீடியோ காட்சியை கண்ட திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவி, உடனடியாக, திருமுல்லைவாயல் நரிக்குறவர் காலனி பகுதிக்கு நேரடியாக வந்து அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய ஒரு மாதத்திற்கு தேவையான பொருள்களை 102 குடும்பத்தினருக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக வழங்கியுள்ளனர்.

இதனை பெற்றுக்கொண்ட நரிக்குறவர் மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Updated On: 25 May 2021 1:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  4. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  5. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  7. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  8. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  9. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!