ஆவடியில் மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபர் கைது

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சேர்ந்த 16 வயது சிறுமி, அம்பத்தூரில் 11ம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் கடந்த 10.ம் தேதி அன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் காணவில்லை. திருமுல்லைவாயல் காவல் நிலைத்தில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமியை குறித்து விசாரணை மேற்கொண்டார். சிறுமியை தாம்பரம் கடப்பேரி முத்தமிழ் நகரை சேர்ந்த கார் ஓட்டுனர் சஞ்சய்(19) கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் கடந்த 12ம் தேதி சஞ்சயிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.
திருமண ஆசை வார்த்தை காட்டி சிறுமியை சஞ்சய் கடத்தி சென்று உறவினர் வீட்டில் தங்கவைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. வழக்கை திருமுல்லைவாயல் போலீசார் ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றினர். இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சஞ்சயை கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu