/* */

ஆவடியில் மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபர் கைது

ஆவடியில், பள்ளி மாணவியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஆவடியில்  மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபர் கைது
X

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சேர்ந்த 16 வயது சிறுமி, அம்பத்தூரில் 11ம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் கடந்த 10.ம் தேதி அன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் காணவில்லை. திருமுல்லைவாயல் காவல் நிலைத்தில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமியை குறித்து விசாரணை மேற்கொண்டார். சிறுமியை தாம்பரம் கடப்பேரி முத்தமிழ் நகரை சேர்ந்த கார் ஓட்டுனர் சஞ்சய்(19) கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் கடந்த 12ம் தேதி சஞ்சயிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.

திருமண ஆசை வார்த்தை காட்டி சிறுமியை சஞ்சய் கடத்தி சென்று உறவினர் வீட்டில் தங்கவைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. வழக்கை திருமுல்லைவாயல் போலீசார் ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றினர். இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சஞ்சயை கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 March 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  3. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  5. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  7. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  8. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி
  10. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!