/* */

இறைச்சிக் கடைக்கு சீல்: 10ஆயிரம் அபராதம்

திருவேற்காடு நகராட்சியில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்டு வந்த இறைச்சிக் கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததோடு ரூ.10ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

HIGHLIGHTS

இறைச்சிக் கடைக்கு சீல்: 10ஆயிரம் அபராதம்
X

திருவேற்காடு நகராட்சியில் ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்டு வந்த இறைச்சிக் கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததோடு ரூ.10ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

கொரோனா பரவல் தாக்கம் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் 12 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் கடைகளின் திறப்பு 10 மணி ஆக குறைக்கப்பட்டது.

மேலும் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் யாரும் வெளியே வரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவேற்காடு நகராட்சி பகுதியில் நகராட்சி சுகாதார துறையினர் ஆய்வு செய்தனர்.

அப்போது அயனம்பாக்கம் பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி இறைச்சிக் கடை செயல்பட்டு வருவதாக தகவல் வந்தது. தகவலையடுத்து திருவேற்காடு நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இறைச்சிக் கடைக்கு சீல் வைத்தனர்.

மேலும் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்ததோடு அங்கிருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி மண்ணில் புதைத்து அழித்தனர்.

Updated On: 16 May 2021 7:28 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  3. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  4. ஈரோடு
    சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர்...
  5. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தைக்கு ஊட்டம்! சரியான உணவுத் திட்டம்!
  7. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  8. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  9. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  10. இந்தியா
    மும்பையில் திடீர் கனமழை..! வெப்பத்துக்கு ஓய்வு..!