/* */

காதல் திருமணமான 3 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை..!

திருமணம் ஆன புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

காதல் திருமணமான 3 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை..!
X

ஆவடி கோவர்த்தனகிரி அன்பு நகர் முதல் தெருவை சேர்ந்தவர் உதயா குமார் (வயது 24).. இவர் இதுபோல் பூந்தமல்லி குமரன் நகரைச் சேர்ந்தவர் அனிதா (26). பி.ஏ. பட்டதாரி. இருவரும் ஒன்றாக, பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர் இருவரும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் அனிதாவிற்கு தனது பெற்றோர் திருமணத்திற்கு வரன் தேடி வந்த நிலையில். உதயகுமார், அனிதாவும் யாருக்கும் தெரியாமல் கடந்த 6ம் தேதி சென்னை ராயபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இருவரும் ஆவடியில் உள்ள உதயகுமார் வீட்டின் மேல் தளத்தில் குடிசை அமைத்து தனியாக குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையில் அனிதாவின் பெற்றோர் அவரை தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளனர். இதற்கு உதயா குமார் வீட்டினர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அனிதா குடிசை வீட்டின் மேற்கூரையில் தன் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. போலீஸார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருவள்ளூர் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். விசாரணைக்குப் பிறகே அனிதா இறந்ததற்கான காரணம் தெரியவரும் என தெரிவித்துள்ளனர். திருமணமான 3 நாளில் புதுப்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 9 April 2022 9:45 AM GMT

Related News