Begin typing your search above and press return to search.
குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை
அயப்பாக்கம் பகுதியில் மனைவி கண்டித்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை. செய்துகொண்டார்.
HIGHLIGHTS
அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரேம்குமார்(38). வாட்டர் கேன் போடும் வாகன ஓட்டுனர். இவரது மனைவி கலைசி (34). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.பிரேம்குமார் நேற்று முன்தினம் மதியம் மது அருந்தி வீட்டிற்கு சென்றுள்ளார். இதை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த பிரேம்குமார் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் தீ காயமடைந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று பிரேம்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.