/* */

குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை

அயப்பாக்கம் பகுதியில் மனைவி கண்டித்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை. செய்துகொண்டார்.

HIGHLIGHTS

குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை
X

அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரேம்குமார்(38). வாட்டர் கேன் போடும் வாகன ஓட்டுனர். இவரது மனைவி கலைசி (34). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.பிரேம்குமார் நேற்று முன்தினம் மதியம் மது அருந்தி வீட்டிற்கு சென்றுள்ளார். இதை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த பிரேம்குமார் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் தீ காயமடைந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று பிரேம்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 27 April 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...