/* */

62 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் அடிக்கல்

திருநின்றவூர் நகராட்சி பகுதிகளில் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 2023 யின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் துவக்கப்பட்டது

HIGHLIGHTS

62 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் அடிக்கல்
X

முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு. நாசர்

திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 62 லட்சம் மதிப்பிட்டிலான புதிய திட்ட பணிகளை முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதி 2023.திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் துவக்கப்பட்டது. அந்த வகையில் 12.வார்டு சூரத்தம்மன் கோயில் தெருவில்₹.30லட்சம் மதிப்பீட்டிலான தார் சாலை அமைக்கும் பணி, திருநின்றவூர் நகராட்சி அருகில் ₹.15லட்சம் மதிப்பிட்டிலான புதிய அங்கன்வாடி கட்டிடம், 17 லட்சம் மதிப்பீட்டில் அரசு பள்ளியின் கூடுதல் கட்டிடம் கட்டும் பணிகளை முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்ட மன்ற உறுப்பினருமான சா.மு.நாசர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

அதேபோல் பாரத பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் 20 நபர்களுக்கு சாலை சிற்றுண்டி கடைகளை வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர் நாசர் சிற்றுண்டி கடைகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், நகர மன்ற செயலாளர் ரவி, நகர மன்ற தலைவர் உஷாராணி ரவி, ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 17 May 2023 2:30 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  2. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  3. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  4. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  5. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  9. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  10. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்