/* */

ரயில் மோதிய விபத்தில் கட்டுமான கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி

ரயில் மோதிய விபத்தில் கட்டுமான கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

HIGHLIGHTS

ரயில் மோதிய விபத்தில் கட்டுமான கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி
X

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காமராஜ் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கட்டுமான கூலித்தொழிலாளி சீனிவாசன் (52) இவர் வழக்கம் போல் காலை 7 மணியளவில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். அப்போது மற்றொரு கூலித்தொழிலாளியுடன் சீனிவாசன் ரயில் வருவதை கவனிக்காமல் பேசியவாறு ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி செல்லும் புறநகர் மின்சார ரயில் சீனிவாசன் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 11 April 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  3. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  5. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் பகுதி அரசு திட்டங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  8. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  10. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?