சென்னை நிருநின்றவூர் அருகே ரயில் தண்டவாளத்தில் தென்னை மரக் கட்டை

தென்னை மரக்கட்டை சிக்கிய தண்டவாளம் பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர்.
Coconut Grove Meaning in Tamil-திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே விரைவு ரயில் தண்டவாளத்தில் தென்னை மர கட்டையை மர்ம நபர்கள் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் என்ஜினில் சிக்கி நின்றதைக் கண்ட ஓட்டுநர் ஆவடி ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளார்.
அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் மார்க்கமாக ரயில் இன்ஜின் இரவு நேரத்தில் சோதனை ஓட்டம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் நேற்று அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி ரயில் என்ஜின் ஒன்று சோதனை ஓட்டம் சென்று கொண்டிருந்தது. அப்போது திருநின்றவூர் ரயில் நிலையத்தை கடந்த போது இன்ஜினில் முன் பகுதியில் மரத்துண்டு ஒன்று சிக்குவதை கண்ட ஓட்டுநர் உடனடியாக ரயில் என்ஜினை நிறுத்தினார்.
இந்த சம்பவத்தை அடுத்து ரயில் ஓட்டுநர் ரயிலை விட்டு இறங்கி தண்டவாளத்தில் சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் தென்னைமர கட்டை ஒன்று சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்த பனைமர கட்டை துண்டை எடுத்து அண்ணனூர் ரயில்வே பாதுகாப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்து இது குறித்து புகார் செய்து சென்றார்.
இதுகுறித்து விசாரணையை துவக்கிய திருவள்ளூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் கொண்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் திருநின்றவூர் நேரு நகர் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தை வெட்டி ரயில் தண்டவாளம் அருகே உள்ள குப்பையில் போட்டதாகவும், இதனை நள்ளிரவில் மர்ம நபர்கள் தென்னைமரம் கட்டையை எடுத்து தண்டவாளத்தில் வைத்து சென்றனர் என்பது தெரியவந்தது .
மேலும் இந்த சம்பவம் குறித்து ரயில்வே டி.எஸ்.பி. முத்துக்குமார் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். மேலும் ரயில்வே போலீசார் சந்தேகத்தின் பேரில் 5க்கும் மேற்பட்டோரை பிடித்து திருநின்றவூர் ரயில் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
குடிபோதையில் மர்ம நபர்கள் தண்டவாளத்தில் மரக்கட்டையை வீசி சென்றார்களா, அல்லது ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டி போடப்பட்டதா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu