ஆவடியில் பிரபல ரவுடி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

ஆவடியில் பிரபல ரவுடி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
X

 யோகேஸ்வரன்

ஆவடியில் பிரபல ரவுடி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பொத்தூர் வள்ளி வேலன் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் பிரபல ரவுடி யோகேஸ்வரன்(32). இவர் வீடுகளுக்கு வர்ணம் பூசும் பெயிண்டர் பணி செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் உள்ளனர். யோகேஸ்வரன் இதற்கு முன் பிரபல ரவுடியாக இருந்துள்ளார். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளது.

இதனை அடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு யோகேஸ்வரன் வழக்கம் போல் வர்ணம் பூசும் பணிக்குச் சென்று மாலை வீடு திரும்பி அன்று இரவு குடும்பத்துடன் சாப்பிட்டுவிட்டு தூங்கி உள்ளார். இவர் தூங்கிக் கொண்டிருந்தபோது ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் வந்த 10 பேர் கொண்ட கும்பல் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த யோகேஸ்வரனை அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களை கொண்டு தலை, கை, கால், முகம் பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

அருகாமையில் தூங்கிக் கொண்டிருந்த யோகேஸ்வரன் மனைவி இந்த சம்பவத்தை கண்டு அலறி அடித்து கூச்சலிட்டார். இந்த சத்தத்தை கேட்ட அருகாமையில் உள்ள குடியிருப்பு வாசிகள் ஓடி வரவே மர்ம நபர்கள் அவர்கள் வந்த வாகனங்களில் ஏறி தப்பி சென்றனர். இதில் காயமடைந்த யோகேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் இறந்து கிடந்த யோகேஸ்வரன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இறந்து போன யோகேஸ்வரன் முன்னாள் பிரபல ரவுடியாக வலம் வந்த போது மீன் வியாபாரி சுறாவுக்கும் தொழில் ரீதியாக போட்டி இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக மீன் வியாபாரி சுறாவை யோகேஸ்வரன் மற்றும் அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து 2016 ஆம் ஆண்டு கொலை செய்துள்ளார் . இந்த முன் விரோத காரணத்தினால் தற்போது யோகேஸ்வரனை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் சந்திப்பராய் ரத்தேர் உத்தரவின் பேரில் இணை ஆணையர் கருப்பன் மற்றும் துணை ஆணையர் பாஸ்கர் உதவி ஆணையர் புருஷோத்தமன் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கொலையில் தொடர்புள்ள குற்றவாளிகள் 6 பேர் சென்னை ஹை கோர்ட்டில் சரணடைய சென்றபோது பாடி ரவுண்டானா பகுதியில் அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணை செய்ததில் மீன் வியாபாரி சுறாவை கொலை செய்ததை முன்விரோதம் காரணத்திற்காக மீன் வியாபாரி சுறா மகன் ரமேஷ் தன் தந்தையை கொலை செய்த யோகேஸ்வரனை தீர்த்துகட்ட திட்டமிட்டு அவரது கூட்டாளிகளான சந்துரு, மணிமாறன், செல்வகுமார், மஞ்சுநாதன், முத்து, யோகேஸ்வரனை வீடு புகுந்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் தீவிர விசாரணையில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Next Story