/* */

10 வயது சிறுவன் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை

அம்பேத்கார் நகர் பகுதியில் 10 வயது சிறுவன் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

10 வயது சிறுவன் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

சென்னை ஐசிஎப் டாக்டர் அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் சதீஷ், ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் மனைவியை பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு 13 வயதில் மகளும் 10 வயதில் ரித்திஷ் என்ற மகனும் உள்ளனர். ரித்தீஷ் 4ம் வகுப்பு படித்து வருகிறார். சதீஷ் வழக்கம்போல் ஆட்டோ ஓட்ட சென்றுள்ளார். வீட்டில் மகள், மகன் ரித்தீஷ், தாத்தா முரளி ஆகியோர் இருந்துள்ளனர். சிறுவன் வெளியே விளையாடி விட்டு வீட்டிற்கு வந்தவுடன் குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றுள்ளார்.

குளியலறைக்குச் சென்ற ரித்தீஷ் வெகு நேரமாகியும் வெளியே வராததால் ரித்தீஷின் சகோதரி சென்று பார்த்தபோது கதவு மூடிய நிலையில் இருந்துள்ளது. சந்தேகம் அடைந்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்து கதவை உடைத்து பார்த்தபோது குளியலறையில் இருந்த ஜன்னல் கம்பியில் வேஷ்டி துணியால் ரித்தீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.

உடனடியாக ஐசிஎப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 10 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து ஐசிஎப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 5 Aug 2021 11:50 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...