பட்டாபிராம்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது!
![பட்டாபிராம்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது! பட்டாபிராம்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது!](https://www.nativenews.in/h-upload/2021/06/19/1106720-img20210619121711.webp)
ஆவடி அடுத்த பட்டாபிராம் பெரியப்பா நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்டூ படித்து வருகிறார். இவருக்கும் ஆவடி காமராஜ் நகர், நாகவல்லி அம்மன் தெருவை சேர்ந்த சாட்ஜன் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மாணவியை திருமண ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதன் விளைவாக மாணவி கர்ப்பம் ஆனார்.
இதனையடுத்து அவரை உறவினர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைக்க அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாட்ஜனை இன்று கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu