/* */

பெரியகுளம் மருந்துகடையில் திருடியவர் திருவனந்தபுரத்தில் மாட்டினார்

பெரியகுளம் மருந்துக்கடையில் புகுந்து கொள்ளையடித்த நபரை போலீசார் திருவனந்தபுரத்தில் கைது செய்தனர்

HIGHLIGHTS

பெரியகுளம் மருந்துகடையில் திருடியவர் திருவனந்தபுரத்தில் மாட்டினார்
X

பெரியகுளத்தில் திருடி திருவனந்தபுரத்தில் கைதானவர்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மெயின் ரோட்டோரம் உள்ள மருந்துக்கடை ஒன்றில் இரவில் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மருந்துகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. தென்கரை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். திருட்டு நடந்த இடத்தில் சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியிலும் இதே பாணியில் ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்று இருந்தது. இரண்டிலும் திருடியது ஒரே நபர் தான் என முடிவு செய்த போலீசார் திருவனந்தபுரம் போலீசாரோடு இணைந்து குற்றவாளியை தேடினர். திருவனந்தபுரம் சென்ற போலீசார் அங்கு மேமம் என்ற பகுதியில் பதுங்கியிருந்த சாகுல் ஹமீது என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் திருடியதை ஒப்புக்கொண்டார். அவர் திருடிய பணத்தில் ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்தை மீட்டனர். சாகுல்ஹமீது கைது செய்யப்பட்டார்.

Updated On: 29 July 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  3. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  4. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  5. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  6. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  7. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  10. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...