/* */

மேள தாளம் முழங்க, பாட்டு பாடி காவிரி நீரை வரவேற்ற பொதுமக்கள்

மேள தாளம் முழங்க, பாட்டு பாடி காவிரி நீரை வரவேற்ற பொதுமக்கள்
X

திருவையாறில் மேள,தாளம் முழங்க பாட்டு பாடி காவிரி நீரை பொதுமக்கள் வணங்கி வரவேற்றனர். தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு, 16ம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை காவிரி நீர் வந்தடைந்தது.

அப்போது, திருமஞ்சனவீதி படித்துறையில் பெண்கள்,சிறுமிகள் உள்ளிட்ட மக்கள், மேள,தாளம் முழங்க, பாட்டு பாடி காவிரி நீரை வரவேற்றனர். பின்னர், காவிரி நீரை, காவிரி தாயாக பாரம்பரிய முறைப்படி, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து, விவசாயம் செழிக்க வேண்டியும், உணவு தட்டுபாடு இன்றி அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என வழிபட்டனர்.

Updated On: 17 Jun 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...