/* */

மயிலாடுதுறை குத்தாலம் அரசு பள்ளிகளில் மொழிகள் ஆய்வகம் திறப்பு

இந்த மொழிகள் ஆய்வகங்களின் மூலமாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயிலும் சுமார் 35 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்

HIGHLIGHTS

மயிலாடுதுறை குத்தாலம் அரசு பள்ளிகளில் மொழிகள் ஆய்வகம் திறப்பு
X

மயிலாடுதுறை குத்தாலம் அரசு பள்ளியில் மொழிகள் ஆய்வகம்: அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார்.

இதில், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், மயிலாடுதுறை எம்.எல்.ஏ.எஸ்.ராஜ்குமார், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன், சீர்காழி எம்.எல்.ஏ. எம்.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வரவேற்புரை ஆற்றினார்.

குத்தாலம் அரசுப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மொழிகள் ஆய்வகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது: மொழி ஆய்வகம் என்பது நவீன மொழி கற்பிப்பிற்கு உதவும் ஒரு கேள்வி அல்லது காட்சி-கேள்விக் கருவி ஆகும். இது பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக் கூடங்களில் காணப்படுகின்றன. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் கையாளும் மொழிகள் ஆய்வகங்களை நிறுவி வருகிறது. 2023- 2024-ம் கல்வி ஆண்டில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சரளமாக ஆங்கில மொழியை கையாளும் திறனை மேம்படுத்துவதில் இத்திட்டம் முனைப்புடன் செயல்படுகிறது.

மாநிலம் முழுவதிலும் 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் உள்ள மொத்தம் 89,680 செயல்படும் நிலையில் உள்ள கணினிகள் மொழிகள் ஆய்வகங்களாக செயல்படும். இந்த மொழிகள் ஆய்வகங்களின் வாயிலாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 35 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இந்த திட்டம் தமிழ்நாட்டில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் உதயநிதி.

அப்போது பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா, திமுக மாநில உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் குத்தாலம் க.அன்பழகன், தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி, குத்தாலம் ஒன்றிய க்குழு தலைவர் கு.மகேந்திரன்.

குத்தாலம் ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், ஏ.ஆர்.ராஜா, குமரா.வைத்தியநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஜயா ராஜேந்திரன், குத்தாலம் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன், துணைத் தலைவர் சம்சுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா நன்றி கூறினார்.

Updated On: 17 March 2023 8:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை