/* */

கீரனூர் அருகே சாலை விபத்து: புதுமாப்பிள்ளை பரிதாப பலி

கூகூர் மோசடிகுடி பிரிவு சாலை அருகில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் புதுமாப்பிள்ளை பலியானார்.

HIGHLIGHTS

கீரனூர் அருகே  சாலை விபத்து: புதுமாப்பிள்ளை பரிதாப பலி
X

விபத்திற்குள்ளான கார்.

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் அருகில் உள்ள கூகூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகையா. இவரது மகன் பிரகாஷ் வயது 28. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு திரும்பிய இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று மாலை கீரனூரிலிருந்து தனது சொந்த காரில் கூகூரிற்கு சென்று கொண்டிருந்தபோது, மோசடிகுடி பிரிவு சாலை அருகில் கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் பிரகாஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவலை அறிந்த கீரனூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Updated On: 27 July 2021 4:45 AM GMT

Related News