/* */

கோடநாடு வழக்கு விசாரணை: நாளை இருவர் ஆஜராக சம்மன்

கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 5, 6 ம் நபர்கள் நாளை ஆஜராக உத்தரவு.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கு விசாரணை: நாளை இருவர் ஆஜராக சம்மன்
X

பைல் படம்.

கோடநாடு வழக்கு ஒவ்வொரு நாளும் மறுவிசாரணை பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக கருதப்படும் சயான், மற்றும் நான்காம் நபர் ஜம்சீர் அலி, 8 ம் நபர் சந்தோஷ் சாமி, 9 ம் நபர் மனோஜ்சாமி என இதுவரை நான்கு பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை 5 ம் நபர் சதீசன், ஆறாம் நபர் பிஜுன் குட்டி ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி ஐந்து மற்றும் ஆறாம் நபர்களாக உள்ள சதீஷன், பிஜுன் குட்டி உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாளை ஆஜராக உள்ளனர். மேற்கு மண்டல ஐஜி மற்றும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏடிஎஸ்பி தலைமையில் விசாரணை நடைபெறவுள்ளதாக தெரிகிறது.

கோடநாடு கொலை வழக்கில் 10 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இதுவரை 6 பேர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். மீதமுள்ள நான்கு பேர் அவர்களுக்காக கூறப்படும் நாட்களில் ஆஜராவர் என தெரிகிறது. மேலும் எதிர்வரும் அக்டோபர் 1 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை உதகை அமர்வு நீதிமன்றத்திற்கு வர உள்ளதால் அதற்குள் அனைவரும் விசாரிக்கப்படுவர் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Updated On: 22 Sep 2021 4:22 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  3. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  5. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  6. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  7. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  8. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  9. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  10. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு