/* */

கோடநாடு வழக்கு: காலை முதல் இரவு வரை நீடித்த விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 ம் நபரிடம் மாவட்ட எஸ்பி, ஏடிஎஸ்பி ஆகியோர் 8 மணி நேரம் விசாரணை.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கு: காலை முதல் இரவு வரை நீடித்த விசாரணை
X

விசாரணை நடைபெறும் இடம்.

கடந்த சில நாட்களாக கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றம்சாட்டப்பட்டுள்ள 4 ம் நபராக உள்ள ஜம்ஷீர் அலியிடம் நேற்று 8 மணி நேரம் மாவட்ட எஸ்.பி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பவம் தொடர்பாக ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுத்தரப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், நாள்தோறும் உதகை மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் முதல் நபராக சயான் மட்டும் விசாரிக்கப்பட்டிருந்தார். இரண்டாவதாக இவ்வழக்கில் நான்காம் நபராக உள்ள ஜம்ஷீர் அலி, கேரளாவிலிருந்து வந்து விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் மாவட்ட எஸ்.பி ஆஷிஸ்ராவத் தலைமையில் தனிப்படை போலீசார் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

Updated On: 14 Sep 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  3. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  4. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  5. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  6. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  8. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  9. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  10. திருத்தணி
    சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழப்பு!