/* */

மாணவியிடம் தகாத செயல் தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்

தலைமை ஆசிரியர் சுப்பிரமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

மாணவியிடம் தகாத செயல் தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்
X

உதகை அருகே முத்தோரை பாலாடா கிராமத்தில் ஏகலைவா அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி கோக்கால் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பிளஸ்-2 மாணவியின் கழுத்தில் அணிந்த துப்பட்டாவை கையால் இழுத்து கழற்றினார். இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மாணவி ஊட்டி ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியிடம் தகாத செயலில் ஈடுபட்ட உதகை அருகே கல்லக்கொரை கிராமத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் சுப்பிரமணி (58) மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியிடம் தலைமை ஆசிரியர் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது. பின்னர் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 2 April 2022 4:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு