/* */

ஊட்டி மலைரயில் மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து

மண் சரிவு ஏற்பட்டு கடந்த நவம்பர் 22ம் தேதி முதல் மலை ரயில் சேவை இயக்கப்படாமல் இருந்தது.

HIGHLIGHTS

ஊட்டி மலைரயில் மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து
X

ஊட்டி மலை ரயில் 

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழக பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது, என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மலை சேவை மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்றும் நாளையும் மலை ரயில் சேவை இயங்காது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்டு கடந்த நவம்பர் 22ம் தேதி முதல் மலை ரயில் சேவை இயக்கப்படாமல் இருந்தது. பாதை சரிசெய்யப்பட்டு நேற்று முதல் மலை ரயில் சேவை தொடங்க இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று மீண்டும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On: 10 Dec 2023 5:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...