/* */

கூடலூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானை

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி ஓடக் கொல்லி பகுதியில் வீட்டை சூறையாடிய விநாயகன் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்.

HIGHLIGHTS

கூடலூர் அருகே வீட்டை சூறையாடிய காட்டு யானை
X

காட்டு யானையால் சேதமடைந்த வீடு. 

சமீபகாலமாக கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் விநாயகன் என்ற காட்டு யானை அடிக்கடி குடியிருப்புகளையும், விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிப்பதால், வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வனத்துறையினர் யானையை விரட்டினாலும் மீண்டும் கிராம பகுதியை நோக்கி யானை நாள்தோறும் உலா வருகிறது. இந்நிலையில் கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட ஓடக் கொல்லி பகுதியில் லீலா என்பவரது வீட்டை யானை சூறையாடியது. மேலும் விளைநிலங்களையும் சேதப்படுத்தியது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் குடும்பத்தினர் உயிர் தப்பினர்.

விநாயகன் என்ற காட்டு யானை அடிக்கடி கிராமப்பகுதியில் உலா வருவதால் நாள்தோறும் உயிர்போகும் அச்சத்தோடு இருந்து வரும் கிராம மக்கள் யானையை அடர் வனத்தில் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 19 Oct 2021 7:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க