/* */

கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்: குடியிருப்புவாசிகள் கலக்கம்

கூடலூர் கலிங்கரை பகுதியில் உலா வந்த காட்டு யானைக் கூட்டத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம் கூடலூர் கல்லிங்கரை என்னும் பகுதியில் இன்று அதிகாலை 6 மணிக்கு, ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள் ஆட்களைத் துரத்திச் சென்றன. இதனால், மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். யானைகள் நடமாட்டம் குறித்து, அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், வனத்துறை வாகனம் மூலம் ஒலியெழுப்பி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். தற்போது கூடலூர் பகுதிகளில் அதிகளவில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், வனத்துறையினர் முகாமிட்டு, தீவிரமாக கண்காணித்து யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே, வன விலங்குகள் நடமாட்டத்தால், அதிகாலை வேளையில் பொதுமக்கள் நடைபயிற்சி உள்ளிட்ட வெளி நடமாட்டத்தை தவிர்க்க வேண்டுமென வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Updated On: 18 Jun 2021 5:01 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?