/* */

திருச்செங்கோடு நகராட்சியில் போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏ தோல்வி

திருச்செங்கோடு நகராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போடியிட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏ சரஸ்வதி தோல்வி.

HIGHLIGHTS

திருச்செங்கோடு நகராட்சியில் போட்டியிட்ட  முன்னாள் அதிமுக எம்எல்ஏ தோல்வி
X

திருச்செங்கோடு நகராட்சித் தேர்தலில், வார்டு கவுன்சிலர் பதவிக்கு போடியிட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏ சரஸ்வதி 122 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சித் தலைவராக கடந்த 2011-2016 ஆண்டுகளில் பொன் சரஸ்வதி பணியாற்றினார். பின்னர் 2016-2021ம் ஆண்டில் அதிமுக சார்பில் திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில், எம்ல்ஏ பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், திருச்செங்கோடு சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொன்சரஸ்வதி தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பொன் சரஸ்வதி, திருச்செங்கோடு நகராட்சி 23வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் 23வது வார்டு அதிமுக வேட்பாளர் பொன்சரஸ்வதி 839 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டு திமுக வேட்பாளர் புவனேஸ்வரி 1,061 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

Updated On: 22 Feb 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்